செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதியை நடனம் ஆடி வரவேற்ற தாசில்தார்

போட்டியை மக்களிடம் பிரபலப்படுத்த நடவடிக்கை ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதியை நடனம் ஆடி தாசில்தார் வரவேற்ற காட்சி.
செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதியை நடனம் ஆடி தாசில்தார் வரவேற்ற காட்சி.
Published on

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வகைகளில் சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக கலெக்டர் அமர்குஷ்வாஹா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று கொண்டுவரப்பட்ட ஒலிம்பியாட் ஜோதியை திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி ,ஆம்பூர் வழியாக சென்னை நோக்கி செல்ல, வாணியம்பாடிக்கு கொண்டுவரப்பட்டது.

அந்த ஒலிம்பியாட் ஜோதியை, வாணியம்பாடி தாலுக்கா அலுவலகத்திற்கு கொண்டு வந்த போது அங்கு நூதன முறையில் வாணியம்பாடி தாசில்தார் சம்பத் நடனம் ஆடியும், குத்தாட்டம் போட்டும் வரவேற்றார்.

இது அங்கு வந்த பார்வையாளர்களிடமும் பொதுமக்களும் பெருத்த வரவேற்பை உண்டாக்கியது.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வாணியம்பாடி வருவாய் கோட்ட அலுவலர் பிரேமலதா மற்றும் வருவாய்த்துறையினர், நகராட்சி துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com