search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தல்
    X

    ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தல்

    • கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு எடுத்து சென்றனர்
    • கூலி தொழிலாளர்கள் 2 பேர் கைது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கரம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற சரவணன் (23). இருவரும் கம்பி கட்டும் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் இருவரும் கர்நாடகாவில் இருந்து 23 அட்டை பெட்டிகளில் காரில் மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கந்திலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்று காலை கந்திலி போலீசார் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெங்களூரு வில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    சோதனையில் 23 அட்டைப்பெட்டிகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் காருடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ராம்குமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×