search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
    X

    ஆம்பூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

    • நாளை நடக்கிறது
    • பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

    முருகன் தியேட்டர் அருகில் இருந்து மாலை 4.15 மணிக்கு ஊர்வலம் தொடங்குகிறது. இதையடுத்து மாலை 6 மணி அளவில் பொ துக்கூட்டம் நடைபெறுகிறது.

    அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்க வாணியம்பாடி, ஆம்பூர் அருகே உள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.

    இதைத் தொடர்ந்து ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×