search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமையலர், உதவியாளருக்கு புத்தாக்க பயிற்சி
    X

    சமையலர், உதவியாளருக்கு புத்தாக்க பயிற்சி

    • சுகாதார உணவு உட்கொள்ள செய்தல் குறித்து விளக்கம்
    • உணவுப் பொருட்களை பாதுகாக்க வேண்டும்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளி சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், துரை ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மனிதவளமேம்பாட்டு அலுவலர் முனிராஜ், சுகாதார மேற்பார்வை யாளர் முத்துக்கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் கலந்து கொண்டு, பயிற்சி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஜோலார்பேட்டை வட்டாரத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளின் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    இதில் பள்ளிகளில் மாணவர்க ளுக்கு சமைக்கப்படும் உணவுகள் எவ்வாறு சமைக்க வேண்டும், உணவுப் பொருட்களை பாதுகாப்பது எப்படி, சுகாதார உணவு உட்கொள்ள செய்தல் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    Next Story
    ×