search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பலி
    X

    மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பலி

    தண்ணீரை கீழே ஊற்றும் போது மின்கம்பியில் பட்டு விபரீதம்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் நியூ பெத்லகம் 7 தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது28). ஆம்பூர் நகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

    அவருக்கு திருமணம் ஆகி 7 மாதங்கள் ஆகிறது. இவருடைய மனைவி குமாரி. இவர் இரவு 11:30 மணி அளவில் மின்சார அடுப்பில் சுடு தண்ணி சூடு செய்து பின்பு குளித்துவிட்டு மீதமுள்ள தண்ணீரை மாடி மேலிருந்து கீழே ஊற்றி உள்ளார்.

    அப்போது மாடி வீட்டு அருகே உள்ள மின்சார கம்பிகள் மீது தண்ணீர் பட்டு மின்சாரம் இவர் மீது பாய்ந்து மாடியில் சுருண்டு விழுந்த அவரை உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

    ஆம்பூர் டவுன் போலீசார் ஜெயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×