search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி மலையில் புதிய சிமெண்டு சாலை
    X

    புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    ஏலகிரி மலையில் புதிய சிமெண்டு சாலை

    • ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது
    • அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக உள்ளது. இந்த மலை கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

    இதில் மங்களம் கிராமத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டு, குழியுமாக காணப்பட்டது.

    அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மக்களின் கோரிக்கையை ஏற்று என்.என்.டி. நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.

    இதனை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீகிரிவேலன், துணைத் தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×