மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

எந்தெந்த துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளது என விளக்கம் பெற்றோர், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி
Published on

வாணியம்பாடி:

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித்தாளாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் ஷபானா பேகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

உயர் கல்வி வழிகாட்டுனர் ஆர்.அஸ்வின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பது குறித்தும் விளக்கி பேசினார்.

11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்த கட்டம் செல்ல எந்தெந்த துறையில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளது என்றும், மேலும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்கி முயற்சி செய்து, வெற்றி பெற வேண்டும் என கூறினார்.

முடிவில் பள்ளி முதல்வர் பரிதா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com