அரசு பள்ளி மாணவர்கள் கோஷ்டி மோதல்

ஒரு மாணவியை 2 பேர் காதலித்ததால் விபரீதம் போலீசார் விசாரணை
அரசு பள்ளி மாணவர்கள் கோஷ்டி மோதல்
Published on

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது அந்தப் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அதே பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவரும், பிளஸ்-1 மாணவர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஒரே மாணவியை 2 மாணவர்கள் காதலித்து வந்ததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மாணவர்க ளுக்கிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாணவர்கள் இருவரும் தங்களுக்கு வேண்டி யவர்களை அழைத்து வந்ததால் மீண்டும் 2கோஷ்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் 2 கோஷ்டியினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்து படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே மாணவியை 2 மாணவர்கள் காதலித்ததால் 2 கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com