நூல் வெளியீட்டு விழா

12 வயது மாணவன் ஆங்கில புத்தகம் எழுதினார்பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
நூல் வெளியீட்டு விழா
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் டவுன் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் எம்.பி. இளங்கோ இவரது மகன் இ. அமிர்தசாய் (, வயது12), 7-ம் வகுப்பு, பெல்ஜியம் நாட்டில் படித்து வருகிறார்.

இவர் சிறு வயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் இவர் மார்வெல் லேட்டஸ்ட்அசெம்பிள்ட் என்ற நூலை எழுதி இருந்தார். நூல் வெளியீட்டு விழா திருப்பத்தூர் அமிர்தா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்தே மாதரம் டிரஸட் ஏ.குஷால்சந்த் சந்த் ஜெயின் தலைமை வகித்தார் பள்ளி தலைமை ஆசிரியர் வி சரவணன் அனைவரையும் வரவேற்றார், புத்தகம் எழுதிய எழுத்தாளர் அமிர்த சாய் பற்றி எம். பி.இளங்கோ அறிமுக உரையாற்றினார்.

மார்வெல்ஸ் லேட்டஸ்ட் அசெம்பிள்ட் என்ற நூலை தமிழ்ச்செம்மல் ரத்தினநடராஜன் வெளியிட தமிழ்ச்செம்மல் என்.கருணாநிதி, பி. ஆர் தேவராஜன் பெற்றுக் கொண்டனர் நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் டாக்டர் மாதவபாரதி, பேராசிரியரியர்கள் வசந்தகுமார், எம், நாராயணன், பி. பாண்டியன், ஆர். கிருபாகரன். உட்பட பலர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் இ. அமிர்த சாய் புத்தகம் எழுதியது குறித்து பேசினார் இறுதியில் கே சதீஷ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com