என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது
ஜோலார்பேட்டை:
மும்பை ரெயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மது போதை யில் பயணம் செய்த முதியவர் ஒருவர் 8 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற் றோர் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்த னர், அதன்பேரில் அவர்கள் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சேலம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வர மூர்த்தி மற்றும் போலீசார், ரெயில் சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் அந்த பெட்டியில் இருந்த முதியவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த முதியவர் வேலூர் காந்தி நகர் பகு தியைச் சேர்ந்த பாபு (வயது 64) என தெரிய வந்தது.
சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் எல் லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், முதியவரை ஜோலார் பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக் டர் இளவரசி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாபுவை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்