search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் கைது
    X

    வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் கைது

    • 15 பவுன் நகை, ரூ.10ஆயிரம் ரொக்கம் கொள்ளை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த தோட்டாளம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 68) விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 15 பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

    இதேபோல அருகே உள்ள வெங்கடேசன் கட்டிட மேஸ்திரி என்பவர் வீட்டில் 10 பவுன் நகைகள், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுக்கா போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கொள்ளையடித்த சம்பவத்தில் வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த சுஹால் ( 28) மற்றும் உமராபாத் கைலாச கிரி நரியம்பட்டு பகுதியைச் சேர்ந்த முஜாத் (28) ஆகியோர் வீடு புகுந்து திருடியது தெரிய வந்தது.

    இதனையடுத்து இன்று காலை ஆம்பூர் டி.எஸ்.பி.சரவணன் தலைமையில் போலீசார் இவர்கள் 2 பேரையும் பிடித்து கைது செய்து அவர்களிடம் நகை பணத்தை மீட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய வருகின்றனர்.

    Next Story
    ×