என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாராயம் விற்ற 2 பெண்கள் கைது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சல் பகுதியில் சாராயம், மது அதிகளவில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் கள்ளதனமாக விற்பனை செய்து வருகின்றனர்.
எனவே ஊர் பொதுமக்கள் சார்பில் பலமுறை எச்சரித்தும் சாராயம் விற்பனை நிறுத்தாததால் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக பாச்சல் பகுதிக்கு சென்று சாராயம் விற்பனை செய்து கொண்டு இருந்த பாச்சல் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகஸ்வரி (வயது 55) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராசாத்தி (வயது 34) ஆகிய இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மேலும் இவர்களிடமிருந்து 15 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டரிடம் மனு அளித்த சில மணி நேரங்களிலேயே நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் போலீசார் மற்றும் கலெக்டரை பாராட்டி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்