நெல்லையில் 30-ந்தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம்

நெல்லையில் 30-ந்தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம் நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:-

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் நடைபெறும்.

அதன்படி வருகிற 30-ந்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தாங்கி மனுக்களை பெறுகிறார்.

இதில் எண்ணை நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com