கல்லிடைக்குறிச்சி அருகே எலக்ட்ரீசியனுக்கு அடி-உதை

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டலில் எலக்ட்ரீசியனுக்கு அடி-உதை விழுந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாதவன்(வயது 45). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

அதே கிராமத்தில் போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசித்து வருபவர் கண்ணன் (40). இவரது மனைவியை மாதவன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் நேற்று அவரை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த மாதவன் கல்லிடைக்குறிச்சி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com