

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திசையன்விளை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
வணிகவரித்துறை அதிகாரி செல்வகுமாரி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
உடன்குடி, இட்டமொழி, நாங்குநேரி, உவரி சாலைகளில் சென்ற நான்கு சக்கரம், 2 சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.
தேர்தலையொட்டி பரிசு பொருட்கள், மது பிரியர்களுக்கு மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி செல்கிறார்களா? எனவும் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.