கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் போட்டியிட்ட தம்பதிகள் வெற்றி

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த 2 தம்பதிகள் போட்டியிட்டனர். இதில் 2 தம்பதிகளும் வெற்றி பெற்றுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர் தி.மு.க. நகர செயலாளர் இசக்கிப்பாண்டியன்.

இவர் தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கல்லிடைக்குறிச்சி 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பதவி சுழற்சி முறையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இசக்கிப் பாண்டியன்  மனைவி பார்வதி 13-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இங்கு தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 12 வார்டுகளை கைப்பற்றி உள்ளது,

இதேபோன்று அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவராக இருந்த முத்துகிருஷ்ணன் என்ற கண்ணன் 8-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இவரது மனைவி சூர்யகலா 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com