முன்னீர்பள்ளம்-சேரன்மகாதேவி போலீஸ் நிலையத்தில் 469 இருசக்கர வாகனங்கள் ஏலம்

முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி போலீஸ் நிலையங்களில் 469 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

 நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் 369 இருசக்கர வாகனங்கள், சேரன்மகாதேவி போலீஸ் நிலையத்தில் 100 இருசக்கர வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு அரசிற்கு ஆதாயம் பெறும் பொருட்டு யாரும் உரிமை கோராத நிலையில் உள்ள இரு சக்கர வாகனங்கள் அரசின் வழிமுறைகளுக்குட்பட்டு வருகிற 16-ந் தேதி முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைத்திலும், 17-ந் தேதி சேரன்மகாதேவி போலீஸ் நிலையத்திலும் பொது ஏலம் நடத்தி விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com