அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று நெல்லை சந்திப்பு ெரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
Published on

நெல்லை:

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று நெல்லை சந்திப்பு ெரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீத வேலை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு பணி இடங்களை தமிழக இளைஞர்களுக்கு முழுமையாக வழங்கிட வேண்டும் எனவும், மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் நிர்வாகிகள் ஷிபானா, ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com