திருக்குறுங்குடி அருகே டிரைவர் மீது தாக்குதல்

திருக்குறுங்குடி அருகே கொடைவிழாவில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் சுரேஷ் என்பவரை வாலிபர் தாக்கினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

களக்காடு:

திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் பருத்திவிளையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது23). டிரைவர்.

சம்பவத்தன்று இரவில் இவர் மலையடிபுதூரில் உள்ள மாடசாமி கோவில் கொடை விழாவிற்கு சென்றார்.

அப்போது அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த  இசக்கிப்பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிப்பாண்டி சுரேஷை அவதூறாக பேசி, தாக்கினார்.

இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com