களக்காடு அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

களக்காடு அருகே ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பலியானார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

களக்காடு:

களக்காடு கோவில்பத்து கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துஆனந்தம் (வயது 45). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.

நேற்று இரவு இவர் சவாரி ஏற்றிக் கொண்டு சாலைப்புதூருக்கு சென்றார். அங்கு ஆட்களை இறக்கி விட்டு, விட்டு, களக்காட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

பிள்ளைமடம் அருகே வந்த போது, சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த முத்துஆனந்தம் சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பலியானார்.

 இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com