நெல்லையில் மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவர்

கணவன்-மனைவி இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவர்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் கிராமம் நயினார்குளம் களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் பலவேசம் (வயது 34). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பலவேசம் அடிக்கடி தனது மனைவி தமிழரசியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீப காலமாக தமிழரசியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு பலவேசம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கினார். இன்று அதிகாலை 4 மணி அளவில் கணவன்-மனைவி இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த பலவேசம், சமையல் அறையில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தமிழரசியை சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தமிழரசி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் பலவேசம் அங்கிருந்து முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை வெட்டிக்கொலை செய்து விட்டதாக தெரிவித்து சரண் அடைந்தார்.

உடனே போலீசார் நயினார் குளத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த தமிழரசி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து பலவேசத்தை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com