search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 18-ந் தேதி முதல் கோவை ரெயில்களின் நேரம் மாற்றம்
    X

    வருகிற 18-ந் தேதி முதல் கோவை ரெயில்களின் நேரம் மாற்றம்

    • கோவை-கண்ணூர் விரைவு ரெயில் (எண் 16608), ஆகஸ்டு 18 முதல் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.
    • கோவை-பொள்ளாச்சி ரெயில் (எண் 06419) ஆகஸ்டு 18-ந் தேதி முதல் கோவையில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு பொ ள்ளாச்சி சென்றடையும்.

    கோவை,

    கோவையில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி, கண்ணூர் செல்லும் ரெயில்களின் நேரம் வருகிற 18-ந் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சியில் இருந்து தினமும் மாலை 6.25 மணிக்கு கோவை வந்தடைந்து இரவு 8.15 மணிக்கு பாலக்காடு சென்றடையும் திருச்சி-பாலக்காடு விரைவு ரெயில் (எண் 16843) ஆகஸ்டு 18-ந் தேதி முதல் கோவைக்கு மாலை 6.10 மணிக்கு வந்தடையும். இரவு 8.15 மணிக்கு பாலக்காடு சென்றடையும்.

    இதேபோல, தினமும் இரவு 7.55 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு-கோவை ரெயில் (எண் 06807) ஆகஸ்டு 18 முதல் பாலக்காட்டில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும்.

    கோவையில் இருந்து தினமும் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு 7.45 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும் கோவை-பொள்ளாச்சி ரெயில் (எண் 06419) ஆகஸ்டு 18-ந் தேதி முதல் கோவையில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு பொ ள்ளாச்சி சென்றடையும்.

    கோவையில் இருந்து தினமும் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு கண்ணூர் சென்றடையும் கோவை-கண்ணூர் விரைவு ரெயில் (எண் 16608), ஆகஸ்டு 18 முதல் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×