என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி அருகே கல்லூரி மாணவி உட்பட 3 பெண்கள் மாயம்
- தருமபுரி அருகே கல்லூரி மாணவி உட்பட 3 பெண்கள் மாயம் ஆனார்கள்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி.
இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். கடந்த 12-ந் தேதி சிறுமியின் தாய் கூலி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள் காணவில்லை. இதனைய டுத்து அவரை எங்கு தேடியும் கிடைக்கா–ததால் மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாண வியை தேடி வருகின்றனர்.
இதேபோல் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சாமி செட்டிபட்டி அருகே உள்ள பங்கு நத்தம் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விடு முறை என்பதால் வீட்டி லேயே இருந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வெளியே வேலைக்கு சென்றவர்கள் மாலை திரும்பி வீட்டில் பார்த்த போது சிறுமியை காண வில்லை. அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தொப்பூர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
இதே போன்று தருமபுரி மாவட்டம் மாரவாடி அடுத்த கதிர்நாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா (43). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் நன்னடத்தை அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் முடிந்து 15 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் தனது தாய் வீட்டில் கதிர்நாயக்கனளி கிராமத்தில் மகள் ரஞ்சனா தேவி (23) என்பவருடன் வசித்து வந்தார். ரஞ்சனா தேவி 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து தாய் இந்திரா கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன ரஞ்சனா தேவியை தேடி வரு கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்