என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வெவ்வேறு விபத்தில் இளம்பெண் உள்பட 3 பேர் பலி
    X

    கோவையில் வெவ்வேறு விபத்தில் இளம்பெண் உள்பட 3 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோட்டார் சைக்கிள் ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.
    • போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்தவர் அருண் (வயது 38). காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நந்தகுமார் (28). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சுங்கம் ரவுண்டானா அருகே சென்று கொண்டு இருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை அருண் ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டுன் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நந்தகுமார் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை- திருச்சி ரோட்டை 70 வது மதிக்கதக்க முதியவர் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற லோடு வேன் முதியவர் மீது ேமாதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய முதியவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் அருகே உள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மனைவி மோகன பிரியா (29). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவைப்புதூர் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன பிரியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×