ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு நடைபெற்றது.
கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு நடைபெற்ற போது எடுத்தப்படம்.
கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு நடைபெற்ற போது எடுத்தப்படம்.
Published on

தென்திருப்பேரை:

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் நேற்று சுபகிருது வருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம்,மூலவர் உற்சவர்களுக்கு புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டது. 

நாலாயிர திவ்யப்பிரபந்தம் நித்யல் கோஷ்டி நடைபெற்றது. மாலை 6. 30 மணிக்கு உற்சவர் சுவாமி கள்ளப்பிரான் ஸ்ரீ தேவி, பூதேவி வைகுண்ட நாயகி சோமநாத நாயகி தாயார்களுடன் சயன குறட்டிற்கு எழுந்தருளினார்.

 அதன்பின் தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி சுபகிருது வருட பஞ்சாங்கம் வாசித்தார். பின் கோஷ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் (பொறுப்பு) ராமசுப்பிரமணியன், ஆய்வாளர் நம்பி தலத்தார்கள் சீனிவாசன், திருவேங்கடத்தான், கண்ணன், ஸ்ரீகிருஷ்ணன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலத்தார்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com