

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலை. இங்கு தமிழகத்தின் தென்பழனி என்றழைக் கப்படும் கழுகாசல மூர்த்தி கோவில் உள்ளது.
குடவரை கோவிலான இந்த திருத்தலத்தில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும்.
இந்தாண்டுக்கான திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டு மகா தீபாரா தனையும் நடை பெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறும்.
விழாவின் சிகர மான கருதப்படும் திருத் தேரோட்டம் வரும் 17-ந்தேதி நடைபெறும்.
18-ந்தேதி தீர்த்தவாரி, தபசு நிகழ்ச்சியும், 19-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.