search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் திருவேடுபறி திரளான பக்தர்கள் தரிசனம்
    X

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் திருவேடுபறி நிகழ்ச்சியில் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் திருவேடுபறி திரளான பக்தர்கள் தரிசனம்

    • ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் திருவேடுபறி நிகழ்ச்சியில் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.
    • பெருமாள் பெற்றுக்கொண்டதற்கு பட்டோலை எழுதி ஆழ்வாரிடம் தரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையோரத்தில் 9 நவத்திருப்பதிகள் அமைந்துள்ளது. நவதிருப்பதி ஸ்தலங்கள் என அழைக்கப்படும் இந்த ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களாக கருதி வழிபடப்பட்டு வருகிறது. இதில் முதலாவது திருப்பதியான சூரியனுக்கு அதிபதியாக ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்கோவில்

    நேற்று சுவாமி கள்ளப்பிரான் கோவிலில் அத்யயன உற்சவம் இராப் பத்து 8 வது நாளான நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம் மணிக்கு 8 திருமஞ்சனம் 9 மணிக்கு திருவாராதனம். 10.30 மணிக்கு நித்யல் கோஷ்டி. மாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி கள்ளப்பிரான் வாகன குறட்டிற்கு எழுந்தருளினா குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு திருவேடுபரி நடந்தது.

    திருமங்கை ஆழ்வார் தன் படைவீரர்களுடன் பெருமாள் திருவாபரணங்களை களவாடி செல்ல சுவாமி கள்ளப்பிரான் குதிரை வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டி பிடித்தார்.

    அதன் பின்னர் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி திருமங்கை ஆழ்வார் படைவீரன் ஒருவரிடம் பெருமாள் சார்பாக திரவாபரணங்களின் பெயர்களைச் சொல்லி யாரிடம் எனக் கேள்விகள் கேட்டல் நடந்தது.

    அதன்பின் அத்யாபகர்கள் சீனிவாசன், ரங்க ராஜன், சீனிவாச தாத்தம், பார்த்த சாரதி, ராமானுஜம், பெரிய திருவடி, ஜெகநாதன், சம்பத், திமங்கை ஆழ்வார் பாசுரங்களை பாடினார்கள்

    இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் சீனிவாசன் தேவராஜன். வாசன். அர்ச்சகர்கள் ரமேஷ் வாசு அனந்த பத்மநாபன் சீனு நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி ஆகியோர் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல்

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் திருவேடுபறி நிகழ்ச்சி திரளான பக்தர்கள்

    நவ திருப்பதிகளில் 9 வது திருப்பதியாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் மூலவர் ஆதிநாதர் தாயார்கள் ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி, இத்திருத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் திருஅவதாரம் செய்தார்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த திவ்ய தேசத்தில் மார்கழி திரு அத்யன உத்சவம் (பகல் பத்து இராப்பத்து) கடந்த 24ந்தேதி அன்று ஆரம்பித்து 21 தினங்களாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. காலையிலும் மாலையிலும் உற்ச்சவர் பொலிந்து நின்றபிரான் மற்றும் சுவாமி நம்மாழ்வார் ஆகியோருக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பிரபந்த பாராயணம் நடைபெறுகின்றது.

    இராப்பத்து உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக 8ம் திருநாளான நேற்று திருவேடுபறி வைபவம் கோயில் வடக்கு மாட வீதியில் நடந்தது. இதற்காக சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஒரு கையில் தங்க கவசம், ஒரு கையில் சாட்டை, தலையில் கொண்டை மார்பில் காசு மாலை, செண்பக மாலை, கல் பதித்த ஆபரணம், மலர் மாலைகள் போன்றவைகள் அணிந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். திருமங்கை ஆழ்வார் கை கூப்பிய நிவையில் தோளுக்கினியானில் ஏழுந்தருளினர் மாட வீதிகளில் வலம் வந்த பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஓடிவர நிற்க என கள்வருக்கு பயந்தது போல் திருவிளையாடல் நடைபெற்றது, திருமாலுக்கு தொண்டு செய்தே தன் செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன் பெருமாளுக்கு தொடர்ந்து கைங்கரியம் செய்ய நினைத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டார். இவரை ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் தம்பதி சமேதராக வழிப்போக்கனாக வந்து தன் செல்வத்தை பறிகொடுக்கும் வேடுபறி வைபவம் நடந்தது. வந்தது பெருமாளே என்று உணர்ந்து தன் கைகூப்பியபடி திருமங்கைஆழ்வார் பெருமாள் முன் பணிந்து இருந்தார். இந் நிகழ்ச்சி புராணமாக அரையார் மற்றும் அர்ச்சகரால் பாடப்பெற்றது. பின்னர் பெருமாளிடம் தான் அபகரித்த தங்க நகைகளை ஒப்படைக்க, அதற்கு பெருமாள் பெற்றுக்கொண்டதற்கு பட்டோலை எழுதி ஆழ்வாரிடம் தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கோவிலில் எழுந்தருளிய பெருமாள் மற்றும் ஆழ்வாருக்கு ஆழ்வார்திருநகரி ஜீயர் சுவாமிகள், திருவாய்மொழிபிள்ளை சுவாமிகள் மற்றும் பிரபந்த கோஷ்டியார் சிறிய திருமடல் பாடியபடி கோயிலின் உள் அழைத்து சென்றனர் இத்தகைய சிறப்பு வாய்ந்த வேடுபறி உற்ச்சவம் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

    Next Story
    ×