search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
    X

    விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    • வயிற்று வலியால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அடுத்த சின்னபுஷ்பகிரி கிராமம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் ( வயது 60), தொழிலாளி.

    இவர் கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து, மாத்திரை சாப்பிட்ட பிறகும் கூட நோய் குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த பன்னீர்செல்வம் கடந்த 15-ந் தேதி, தனது மாட்டு கொட்டகையில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.

    இதனை பார்த்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பன்னீர்செல்வம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×