search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு களைகட்டிய மாட்டு சந்தை
    X

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு களைகட்டிய மாட்டு சந்தை

    • ரூ.1 கோடிக்கு மேல் விற்பனையானது
    • அதிகாலை முதலே விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தேப்பந்தல் மாட்டுச்சந்தை மிகவும் பெயர் பெற்ற சந்தையாக விளங்கி வருகின்றது.

    இந்த மாட்டு சந்தையில் ஜெர்சி களர் நாட்டு மாடு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வருகின்றன. வேலூர் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களி இருந்தும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலத்திலிருந்தும் மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கும் விற்பனை செய்யவதற்கும் இந்த தேப்பனந்தல் மாட்டு சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    தற்போது வரையில் இந்த சந்தையில் கைகளில் துண்டு போட்டு மாட்டு விவசாயிகள் விலை பேசும் நிகழ்வு நடைபெற்று வருகின்றன.

    நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் அதிகாலை முதலே விவசாயிகள் ஆர்வத்துடன் மாடுகள் வாங்கவும் விற்பனை செய்யவும் குவிய தொடங்கினர்.

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுமார் ரூ.1 கோடி மேல் மாட்டுகள் விற்பனை நடைபெற்றதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.

    Next Story
    ×