search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி
    X

    பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி

    • அண்ணனை ஊருக்கு அனுப்பிவிட்டு திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் உடல்களை மீட்டு விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே அரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40), லாரிடிரைவர். இவருக்கு சரிதா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தன் அண்ணன் வெங்கடேசனை ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.

    அவரை தேவிகாபுரத்தில் பஸ் ஏற்றி விட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது போளூரில் இருந்து தேவிகாபுரம் நோக்கி கோட்டி என்பவர் மொபட்டில் பிரகாஷ் என்ற நண்பருடன் வந்து கொண்டிருந்தார்.

    முடையூர் காளியம்மன் கோவில் அருகே வரும்போது 2 பேரின் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கோட்டி, பிரகாஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம்பக்கத் தினர் அவர்களை மீட்டு சிகிச் சைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோட்டி பரிதாபமாக இறந் தார். பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×