search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளவி கொட்டி விவசாயி சாவு
    X

    குளவி கொட்டி விவசாயி சாவு

    • கூட்டை கலைக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த மோரணம் ஏ காலனியை சேர்ந்தவர் பாலு (வயது 70).விவசாயி. இவரது மனைவி முருகம்மாள் (64). இவர்களுக்கு வாணி என்ற மகளும், சரவணன், நாராயணன் என்ற மகன்களும் உள்ளனர்.

    இவர்களது வீட்டு மாடியில் குளவி கூடு கட்டி இருந்தது. அதனை அழிப்பதற்காக கடந்த 15-ந் தேதி பாலு உள்பட குடும்பத்தினர் வீட்டு மாடிக்கு சென்று குளவி கூட்டை கலைக்க முயன்றனர். அப்போது குளவி அனைவரையும் கொட்டி உள்ளது. இதில் பாலு படுகாயம் அடைந்தார். மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த பாலுவை மீட்டு குடும்பத்தினர் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வரும் வழியில் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் பாலுவை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாலுவின் மகன் சரவணன் மோரணம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×