search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடன் தொல்லையால் போலீஸ்காரர் தற்கொலை
    X

    கடன் தொல்லையால் போலீஸ்காரர் தற்கொலை

    • குடும்ப பிரச்சினையால் மன உளைச்சலில் காணப்பட்டார்
    • தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்

    வேட்டவலம்:

    வேட்டவலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் பிர சாந்த் (வயது 28). இவர் சென் னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவுரி. மகன் தமிழ் அமுதன் (2).

    இந்த நிலையில் பிரசாந்த் கடன் பெற்று இதனால் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடும்ப பிரச்சினை யாலும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்டார்.

    நேற்று காலை பிர சாந்த், வீட்டின் அருகே உள்ள ஆணைக்கட்டு சாவடி பகுதியில் உள்ள கல்குவாரி குட் டைக்கு சென்றார்.

    அங்கு குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண் டார். இது குறித்து அந்த பகு தியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பிரசாந்த் குதித்த கல் குவாரி குட்டையில் இறங்கி அவரை தேடினர்.

    சிறிது நேர தேடலுக்கு பிறகு பிரசாந்தை அவர்கள் பிணமாக மீட்டனர். பின்னர் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பிரசாந்தின் தாயார் குமுதவல்லி, வேட்டவலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×