என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
- ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணிக்குத் தொடங்குகிறது
- கோயில் நிர்வாகம் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலப் பாதையில் மாத ம்தோ றும் பவுர்ணமி நாள்களில் பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணா முலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்த நிலையில், ஆனி மாதப் பவுர்ணமி வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை மாலை 5.48 மணிக்கு முடிகிறது.
இந்த குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story






