மொரம்பு மண் கடத்திய லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்

அதிகாரியை கண்டவுடன் டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர் போலீசார் விசாரணை
மொரம்பு மண் கடத்திய லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
Published on

ஆரணி:

ஆரணி அருகே 12 புத்தூர் கிராமத்தில் உள்ள ஓமந்தாங்கல் ஏரியில் மொரம்பு மண் கடத்துவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர் .

அதபேரில் ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் மண் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருவரை கண்டவுடன் டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்து தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து கோட்டாட்சியர் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இதே போல ஆரணி அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் ஏரியில் 2 டிராக்டர்களில் மண் கடத்துவதாக வந்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர் .

இந்த 2 சம்பவங்களில் தப்பி ஓடிவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com