search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகையில் ரூ.22 கோடிக்கு மது விற்பனை
    X

    தீபாவளி பண்டிகையில் ரூ.22 கோடிக்கு மது விற்பனை

    • 206 டாஸ்மாக் மதுக்கடைகளில் வசூல்
    • நாள் ஒன்றுக்கு சராசரியாக 7.33 கோடி விற்பனை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் 22 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    நவம்பர் 12-ந்தேதி தீபாவளி பண்டிகையை திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பட்டாசுகள் வெடித்தும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    நவம்பர் 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 206 டாஸ்மாக் மதுக்கடைகளில் 22 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெறும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாள் ஒன்றுக்கு சராசரியாக 7.33 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

    Next Story
    ×