search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் கோவிலில் தீ மிதி விழா
    X

    அம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்த போது எடுத்த படம்.

    அம்மன் கோவிலில் தீ மிதி விழா

    • பக்தர்கள் மஞ்சள் உடை அணிந்து பூ கரகத்துடன் ஊர்வலம் சென்றனர்
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பச்சையம்மனை தரிசனம் செய்தனர்

    வந்தவாசி :

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் ஆடி மாதம் முன்னிட்டு தீ மிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

    பக்தர்கள் மஞ்சள் உடை அணிந்து கொண்டு பூ கரகத்துடன் ஊர்வலமாக சென்று தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். இதைத்தொடர்ந்து ஸ்ரீ பச்சையம்மனுக்கு மங்கல மேல வாத்தியங்கள் முழங்க மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த தீமிதி திருவிழாவை காண வெடால் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பச்சையம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    Next Story
    ×