search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கியதில் விவசாயி சாவு
    X

    மின்சாரம் தாக்கியதில் விவசாயி சாவு

    • கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூரை அடுத்த சனிக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 70). விவசாயி. இவருக்கு போளூர் சி.சி. ரோட்டில் 2 கடைகள் உள்ளன. இவர் அவ்வப்போது எலக்ட் ரிக்கல் வேலையும் செய்வார். நேற்று காலையில் போளூர் வந்த அவர் தனக்கு சொந்தமான கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இறந்து விட்டார். இது குறித்து அவருடைய மகன் கார்த்திகேயன் புகார் அளித்தார். அதன்பேரில் போளூர் போலீசார் விசாரணை

    வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×