துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

போளூர் சனிக்கவாடி கிராமத்தில் நடந்தது பொது மக்களுக்கு அன்னதானம்
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
Published on

போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சனிக்கவாடி கிராமத்தில் பாஞ்சாலி அம்மன் கோவிலில் இக்கோவில் அக்னி வசந்த விழா 9-ம் ஆண்டு நடைபெறுகிறது கடந்த ஜூன் 9-ந்தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா மகாபாரத சொற்பொழிவு தொடங்கியது.

20 நாட்களும் மகாபாரத சொற்பொழிவு 7 நாட்கள் நாடகமும் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நேற்று திரவுபதி அம்மன், கிருஷ்ணர், தருமர், அர்ஜுனன் ஆகிய சிலைகளுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டது.

காலையில் 10 மணியளவில் துரியோதனம் படுகளம் மதியம் 12 அன்னதானமும் மாலை 5 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெற்றது.

முதலில் அக்னி கரகம் பயபக்தியுடன் தீயில் இறங்கியவுடன் பொதுமக்களும் அம்மனை வேண்டி விரதங்கள் இருந்து வேண்டுதலை நினைத்து பக்தியுடன் தீயில் இறங்கி அம்மன் அருள் பெற்றனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் தருமருக்கு பட்டாபிஷே கமும் பிறகு அன்னதானம் நடைபெற்றது விழா ஏற்பாடு களை பொது மக்களும் இளைஞர் அணிகள் ஏற்பாடு செய்தி ருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com