search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்
    X

    பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

    • 100 நாள் வேலை அட்டையை சாலையில் போட்டனர்
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

    செங்கம்:

    செங்கம் அடுத்த புதுப்பேட்டை பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக ஊராட்சி நிர்வாகம் அறிவித்து அதன்மூலம் பயனாளிகள் தேர்வு செய்து 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது.

    தேர்வு செய்த பயனாளிகளை 10 வருடங்களுக்கு முன்பு உள்ள கணக்கீடு பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்படுத்தி தற்போது புதியதாக கணக்கீடு செய்து அதன்மூலம் பயனாளிகளை தேர்வு செய்திட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துறைச்சார்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதியில் உள்ள பெண்கள் பலமுறை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட பெண்கள் 100 நாள் வேலை அட்டையை சாலையில் போட்டு ஒப்பாரி வைத்து நூதனமுறையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த மேல்செங்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினர். இதைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×