கிணற்றில் விழுந்த மாடுகள் உயிருடன் மீட்பு

மேய்ச்சலின் போது பரிதாபம் வீட்டில் புகுந்த பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்
கொங்கிராம்பட்டு ஏரிக்கரை அருகே கிணற்றில் விழுந்த மாடுகளை கயிறு கட்டி மீட்கப்பட்டது. வீட்டில் புகுந்த பாம்பை பிடித்த காட்சி.
கொங்கிராம்பட்டு ஏரிக்கரை அருகே கிணற்றில் விழுந்த மாடுகளை கயிறு கட்டி மீட்கப்பட்டது. வீட்டில் புகுந்த பாம்பை பிடித்த காட்சி.
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பசு மாடு மேய்ச்சலின் போது, அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கண்ணமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் சிவனேசன் மற்றும் படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பசுமாட்டை கிணற்றிலிருந்து கயிறு மூலம் உயிருடன் மீட்டு ராஜேஷிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் 5புத்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான மாடு, கிணற்றில் தவறி விழுந்தது.

அந்த பசுமாட்டையும் கண்ணமங்கலம் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். மேலும் கணியம்பாடி கிருஷ்ணா நகரில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் வீட்டில் இருந்த நாக பாம்பையும் தீயணைப்பு படையினர் உயிருடன் பிடித்து கணியம்பாடி காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com