search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்
    X

    சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்

    • உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம்
    • பொதுமக்களின் புகாரின் பேரில் நடவடிக்கை

    வந்தவாசி:

    வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பஜார் சாலை, அச்சரப்பாக்கம் சாலை, காந்தி சாலை, சன்னதி தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன.

    இதனால் பள்ளி மாணவர்கள் முதியோர்கள் பெண்கள் சாலையில் நடந்து செல்லும் போது மாடுகள் முட்டி கீழே தள்ளுகிறது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தனர்.

    நகராட்சி அதிகாரிகள் வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்தனர்.

    மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

    Next Story
    ×