என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் குழந்தைகள் தினவிழா
- பரிசுகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் பங்கேற்றனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா வரவேற்றார்.
மாணவர்கள் பங்கேற்ற குழந்தைகள் தின பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் பள்ளி நூலகத்திற்கு பல்துறை சார்ந்த 30 புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சீனுவாசன் நன்றி கூறினார்.
Next Story






