என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த சு.வாளவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 32). புதுச்சேரியில் தங்கியிருந்து கட்டிட உள் அலங்கார வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி நந்தினி மற்றும் தாய் பாரதி ஆகியோர் சு.வாளவெட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் இருவரும் தூங்கிய போது வீட்டில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 2 பவுன் நகை, ரூ.13000 ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
அதிகாலை வீட்டின் அறைக்குள் சென்று பார்த்த போது திருட்டு நடந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 48). இவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரத்தில் செங்கல் சூளையில் வேலை செய்கிறார்.
இவரது மனைவி ராணி சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனையில் செவிலியர் ஆக பணிபுரிகிறார். இதனால் இவர்களுடைய வீடு பூட்டி இருந்தது.
எனவே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.12000 ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
இந்த 2 திருட்டு சம்பவங்கள் தொடர்பாக புகாரின் பேரில் வெறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்