மரத்தில் பைக் மோதி வாலிபர் சாவு

நண்பர்களை சந்திக்க சென்ற போது பரிதாபம்போலீசார் விசாரணை
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கலவை:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பெரியவேலி யநல்லூர் கிராமம் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.

இவருடைய மகன் அஜித்(வயது 20). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் ஆரணி அருகே உள்ள மாமண்டூர் கிராமத்திற்கு தனது நண்பர்களை சந்திக்க பைக்கில் சென்றார்.

பின்னர் ஆரணி-செய்யாறு நெடுஞ்சாலையில் கலவையை அடுத்துள்ள மாம்பாக்கம் அருகே பைக்கில் வந்தார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் திடீரென சாலையோரமாக இருந்த மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த வாழைப்பந்தல் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், பூஜா, எஸ்.பி தனிப்படை ரகுராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com