என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனக்காவூர் ஒன்றியம் வாச்சனூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
    X

    அனக்காவூர் ஒன்றியம் வாச்சனூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியம், வாச்சனூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார். அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்து வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் திராவிட முருகன், ஞானவேல், மாவட்ட பிரதிநிதி மா.கி. வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×