search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க பூத் கமிட்டி கூட்டம்
    X

    அ.தி.மு.க பூத் கமிட்டி கூட்டம்

    • நிர்வாகி களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது
    • அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பாடுபட வேண்டுகோள்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பிருதூர் மற்றும் வழூர் கிராமத்தில் வந்தவாசி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி கூட்டம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு நிர்வாகி களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என பேசினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஏ.கே.எஸ்.அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், டி.கே.பி.மணி, ஒன்றிய செயலாளர் லோகேஸ்வரன், சித்ரா கலையரசு, ராஜேஷ், பிருதூர் செல்வகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×