ஏரியில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி சாவு

வலையில் சிக்கி இறந்து கிடந்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஏரியில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி சாவு
Published on

செய்யாறு:

செய்யாறு அடுத்த மாறிய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 47). மரம் வெட்டும் தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி செல்வராஜ் காகனம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக வலையை எடுத்து சென்றார்.

ஏரியில் மீன் பிடிக்கும் வலையை போட்டு விட்டு காத்திருந்தார். சிறிது நேரத்திற்கு பின்பு வலையில் சிக்கிய மீன்களை எடுப்பதற்காக தண்ணீரில் இறங்கினார். அப்போது வலையில் கால் சிக்கிக் கொண்டது. பின்னர் தண்ணீரில் மூழ்கி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர் செல்வராஜ் தண்ணீரில் பிணம் மிதப்பதாக கிராம மக்களுக்கு தெரிவித்தார். இதுகுறித்து செல்வராஜின் மகன் ஜீவா மோரணம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை ஏரியில் இருந்து மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com