search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற வாலிபருக்கு அடி-உதை
    X

    சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற வாலிபருக்கு அடி-உதை

    • போக்சோவில் கைது
    • போலீசார் விசாரணை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை வேங்கிக் கால் குபேர நகரை சேர்ந்தவர் அசோக் (வயது 28). நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத் தில் பெயிண்டர் ஒருவர் அவ ரது 5 வயதுடைய பெண் குழந் தையுடன் வந்து பணியாற்றி கொண்டிருந்தார்.

    தந்தையின் கண்காணிப்பில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அப் போது அருகில் இருந்த காலி கட்டிடத்தில் இருந்த சிறுமியின் அழுகுரல் கேட்டது. இதைய டுத்து பெயிண்டர் அங்கு சென்று பார்த்தார்.

    அப்போது சிறுமியிடம் அசோக் தகாத முறையில் ஈடுபட முயன்று உள்ளார். இதை கண்டு ஆத்திரம் அடைந்த பெயிண்டர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அசோக்கை சுற்றி வளைத்து பிடித்து அடித்து உதைத்தனர்.

    அப்போது அசோக் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் அசோக்கை ஒப்படைத்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்து அசோக்கை கைது செய்தனர்.

    Next Story
    ×