search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டல் மாஸ்டர் வீட்டில் 24 பவுன் நகை, பணம் கொள்ளை
    X

    ஓட்டல் மாஸ்டர் வீட்டில் 24 பவுன் நகை, பணம் கொள்ளை

    • தனிப்படை அமைத்து விசாரணை
    • போலீசார் தேடி வருகின்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள கொளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சம் பத்(வயது 58). இவர் இரும்பேடு கூட்ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

    இவருடைய மனைவி பச் சையம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள் ளனர்.

    மேலும், சம்பத்தின் மகன்கள் இருவரும் ஜாம் ஷெட்பூர் டாட்டா நகரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர்.

    இரும்பேட் டில் உள்ள வீட்டில் மனைவியுடன் வசித்து வருகின்றனர். இந் நிலையில், கடந்த 2 வாரங் களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு சம்பத் தனது மனைவியுடன் டாட்டா நகரில் உள்ள மகன்களை பார்ப்பதற் காக சென்றுள்ளனர்.

    மேலும், 'தனது சொந்த ஊருக்கு வருவதற்கு இன் னும் சில நாட்களாகும் என்பதால், சம்பத்தின் மனைவி தனது உறவினர் ஒருவரை வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வரு மாறு தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில், அவரது உறவினர் சம்பத்தின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டின் பின்புறம் உள்ள கேட்டின் பூட்டு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் வீட்டின் உள்ேள சென்று பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ வில் இருந்த 24 பவுன், ரூ.2 லட்சத்தை மர்ம கும்பல் திருடிச்சென்றது தெரிந்தது.

    மேலும், பீரோவில் நகைகள் வைத்திருந்த மணிபர்ஸ்களை வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் உள்ள பக் கெட்டில் தண்ணீர் நிரப்பி அதில் போட்டுவிட்டு சென்றனர்.

    இது குறித்து, சம்பத் துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பத் தின் உறவினர்கள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். 'அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும், திருட்டு குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திரு டிச்சென்ற மர்ம கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×