search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி - பைக் மோதலில் 2 வாலிபர்கள் பலி
    X

    லாரி - பைக் மோதலில் 2 வாலிபர்கள் பலி

    • நேருக்கு நேர் மோதிக்கொண்டன
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    செங்கம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள விருப்பாச்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 21). இவர் திருப்பத்தூர் பகுதியில் தனியார் கல்லூரியில் கலை அறிவியல் படித்து வந்தார்.

    இவருடைய உறவினர் பெயரும் கவுதம் (24). இருவரும் நேற்று திருவண்ணா மலையி லிருந்து கல்லாவி கிராமத்து க்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    செங்கம் அருகே உள்ள ரோடு கரியமங்கலம் பகுதியில் சென்றபோது ஓசூரில் இருந்து கும்பகோணம் நோக்கிச்சென்ற தக்காளி மற்றும் காய்கறி ஏற்றி வந்த லாரியும் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாண வர் கவுதமும், அவரது உற வினரான கவுதமும் படுகா யம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அக்க ம்பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் டாக்டர்கள் பரிசோதித்த போது இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்து குறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்இன்ஸ்பெக்டர் பிரசாந்த் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×